Friday, November 28, 2014

சிரிக்கும் மலர்கள்!

எதிலும் அவசரமாய், இயந்திர கதியில் இயங்கும் வாழ்க்கையில், நம் கண்ணெதிரே, சொர்க்கத்தைக்கொண்டு வரும் பல வண்ண மலர்களில் சில இங்கே!

எங்களின் அடுக்ககத்தில், தோட்ட வேலைக்கு சிறப்புக்கவனம் செலுத்த படுகிறது. வருடா வருடம், சிங்கப்பூரில்,சுற்றுப்புறச்சூழல் அமைச்சின் போட்டிகளில் முதல் பரிசைத்தட்டி செல்ல வேண்டும் என்று, குறியாய் இருக்கிறார்கள். வாழை இலை, வெற்றிலை, முருங்கை கீரை, ஒமச்செடி என எல்லாமும் எங்கள், அடுக்கக்தொகுதிக்கு உள்ளேயே உள்ளன.

இதில் உள்ள எல்லா மலர்களின் பெயர்களும் எனக்குத் தெரியாது. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்!

ஒவ்வொரு நாள் முடிந்து வீட்டுக்கு வரும் போதும், படியருகே இம்மலர்கள் சிரிக்கின்றன.

அலுவலகம் அடுத்த வாரம் ஊரின் மறு கோடிக்கு மாறுகிறது. அழகான சூழலும், நல்ல நட்பாய் அமைந்த நண்பர்களும், பத்தடி தொலைவில் இருக்கும் கோயிலையும் விட்டு, வேறங்கும் மாற மனமில்லை.

பாரதியாரின் காணி நிலம் வேண்டும் பாட்டு தான் நினைவுக்கு வருகிறது.

வீடென்பது வெறும் சுவர்கள் மட்டும் இல்லையே!. எங்கள் அடுக்ககத்தின், தோட்ட ஆர்வலர்களுக்கு ஒரு ஷொட்டு!












1 comment: